×

மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் கபடி வீரர்களுக்கு சீருடை, உபகரணங்கள் வழங்கல்

 

திருப்பூர், மே 5: 25 வயதுக்கு உட்பட்ட சீனியர் பிரிவு ஆண்களுக்கான மாநில அளவிலான யுவா பிரீமியர் லீக் கபடி போட்டிகள் வருகிற 6ம் தேதி சென்னை, பொன்னேரியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயசித்ரா கிளப் அணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஜெயசித்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் ஸ்தாபகர் தொழிலதிபர் ஜெயசித்ரா சண்முகம், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் பொருளாளராகவும், திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் செயலாளராகவும் இருந்து வருகிறார். திருப்பூர் அணிக்குப் பயிற்சியாளராக தண்டபாணி, மேலாளராக வினோத், அணித் தலைவராக கன்னீஸ்வரன் தலைமையில் வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி, வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு, குமரன் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

இதில் திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபாடி கழகத்தின் தலைமை புரவலர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம், புரவலர்கள் ரைஸ் பத்மநாபன், பிரேமா மணி, சேர்மன் கொங்கு முருகேசன், துணை சேர்மன் முருகானந்தம், செயலாளர் ஜெயசித்ரா சண்முகம், பொருளாளர் ஆறுச்சாமி, துணைத் தலைவர்கள் ராமதாஸ் நாகராஜ், பிர்லி கந்தசாமி, லீட்ஸ் நடராஜன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சிவபாலன், கவுரவ உறுப்பினர் கணேஷ், டைஸ் ஸ்ரீதர், துணைச் செயலாளர் செல்வராஜ், நடுவர் குழு சேர்மன் நல்லாசிரியர் முத்துசாமி, நடுவர் குழு கன்வீனர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் கபடி வீரர்களுக்கு சீருடை, உபகரணங்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,State Level Youth Premier League Kabaddi Tournament for ,Men ,Velammal Bodhi Campus ,Ponneri, Chennai ,Dinakaran ,
× RELATED 10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி